ஹன்ஷிகா மோத்வானி நடிப்பில் “மஹா” விரைவில் திரையில் !
சென்னை; நடிகை ஹன்ஷிகா மோத்வானி நடிப்பில் 50 வது திரைப்படமாக உருவாகிறது “மஹா. படம் துவக்கப்பட்டதிலிருந்தே, ஒவ்வொரு கட்டமும் ரசிகர்களின் எதிர்பார்ப்பை எற்படுத்தியுள்ளது. கொரோனா காரணமாக படப்பிடிப்பு பாதியில் நிறுத்தப்பட்டது. தற்போது அது தளர்த்தப்பட்டு கொரோனா முன்னெச்செரிக்கை நடவடிக்கைகளை கடைப்பிடித்து படத்தின் படப்பிடிப்பு மீண்டும் துவக்கப்பட்டது. தற்போது முழுப்படப்பிடிப்பும் நிறைவடைந்துள்ளது. த
இது குறித்து நடிகை ஹன்ஷிகா மோத்வானி கூறியதாவது….
இந்த 2020 ஆம் ஆண்டின் பெரும் பகுதியானது கொரோனா பிடியில் இருந்து நம்மை காத்துக்கொள்ள போராடி கொண்டிருக்கிறோம். நோயின் தாக்கத்தால் மக்களின் வாழ்வாதாரம் முற்றிலும் முடங்கிப் போனது. ஒரு சிலர தங்கள் உயிரை இழந்து, தங்களின் அன்பான குடுமபத்தை சோகத்தில் ஆழ்த்தி, தவிக்க விட்டு சென்றுள்ளனர். அவர்களின் குடும்பங்கள் வலியிலிருந்து மீண்டு வந்து, நலம் பெற இறைவனை பிரார்த்திக்கிறேன். உயிரிழந்த ஆத்மாக்கள் சாந்தியடையவும் வேண்டிக்கொள்கிறேன். என்றார்.
இன்னொரு புறம் கொரோனா பணியாளர்கள் நமக்காக கடும் உழைப்பை தந்து, இந்த கொடிய நோயிலிருந்து நம்மை பாதுகாத்திட தனது உயிரையும் பணயம் வைத்து உழத்துக் கொண்டிருக்கின்றனர். அவர்கள் இல்லாமல் இந்த கொடிய காலத்தை நம்மால் நகர்த்திருக்க முடியாது. கடும் மன உறுதியுடன், மனிதம் காக்க போராடிய அந்த வீரர்கள் அனைவரையும் இந்த தருணத்தில் வணங்குகிறேன். “மஹா” திரைப்படம் முழுமையாக படப்பிடிப்பு முடிக்கப்பட்டது பெரும் மகிழ்ச்சியை தந்துள்ளது. பல தடைகளை தாண்டி நீடித்த, இந்த படப்பிடிப்பில், பங்குகொண்ட படக்குழுவினர் அனைவரும் பெரும் அர்ப்பணிப்புடன் பணியாற்றினார்கள்.
அரசின் அனைத்து வழிகாட்டுதல் நடைமுறைகளையும், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் முழுதாக கடைப்பிடித்தே படப்பிடிப்பை நடத்தினோம். ஆரம்பம் முதல் இறுதி வரை பெரும் ஈடுப்பாட்டுடனும், அர்ப்பணிப்புடனும் பணியாற்றிய இயக்குநர் U.R. ஜமீல் அவர்களுக்கு நன்றி எனக் கூறினார்.
இந்த படத்தின் இசையமைப்பாளர் – ஜிப்ரான்
ஒளிப்பதிவு – J. லக்ஷ்மன்
படத்தொகுப்பு – J.R. ஜான் ஆப்ரஹாம்
கலை இயக்கம் – மணிமொழியன் ராமதுரை
பாடல்கள் – கார்கி
நடன அமைப்பு – காயத்திரி ரகுராம், ஷெரிஃப்
மேக்கப் – ரேஷ்மா
இந்த படத்தின் படப்பிடிப்பு முழுமையாக நிறைவடைந்ததில் மொத்த படக்குழுவும் பெரும் மகிழ்ச்சியில் உள்ளது. வரும் கோடை விடுமுறையில் படத்தை வெளியிட ஆவலாக உள்ளோம். இப்படத்தில் ஒரு பாத்திரமாக நடிக்க ஒப்புக்கொண்ட சிம்புவிற்கு பெரும் நன்றி என தெரிவித்தனர். மேலும் இந்தப் படத்தில் நடிகர் ஶ்ரீகாந்த் முக்கிய பாத்திரத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடதக்கது.
-யாழினி சோமு