தமிழகத்தில் 144 தடை உத்தரவு 31வரை நீடிக்கும் முதலமைச்சர் அதிரடி..!
சென்னை ; சீனாவில் தொடங்கி உலகை உருகுழைத்துக் கொண்டு இருக்கும் கொரோனா அனைத்து நாடுகளுக்குப் பரவி பெறும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. கொரோனா வைரஸ் பலி எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே போகும் நிலையில் இதுவரை 192 நாடுகளில் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது.
உலகம் முழுவதும் 3 லட்சத்து 38 ஆயிரத்து 724 பேர் பாதிக்கப்பட்டு இருக்கின்றனர். நாள்தோறும் பலி எண்ணிக்கை 13 சதவீதம் அதிகரித்து வருவதாக தகவல் வெளியாகிவருகிறது.
இதுவரை இந்தியாவில் பலி எண்ணிக்கை 7 ஆக அதிகரித்துள்ளது. இந்தியாவில் கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கையும் 415 ஆக உயர்ந்துள்ளது.
தமிழகத்திலும் வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 9 ஆக உயர்ந்துள்ளது.
இந்த அவசர நிலையில் கொரோனாவை தடுக்க தமிழகம் முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்க அனைத்து காவல் ஆணையர்களும், ஆட்சியர்களுக்கும் முதல்-அமைச்சர் பழனிசாமி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
முதல்-அமச்சர் பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கை;
- கொரோனா எதிரொலி: தமிழகத்தில் மக்கள் கூட்டம் கூடுவதை தடுக்கும் வகையில் நாளை மாலை 6 மணி முதல் மார்ச் 31-ம் தேதி வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்படுகிறது.
- தமிழகத்தில் கொரோனா தொற்றால் இதுவரை 9 பேர் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் நிலையில் அரசு தடுப்பு நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
- 144 தடை உத்தரவை அனைத்து காவல் ஆணையர்களும், ஆட்சியர்களும் உரிய உத்தரவுகளை பிறப்பிக்க வேண்டும்.
- மருந்து, காய்கறி, மளிகைக்கடைகள் செயல்பட எந்த தடையும் இல்லை.
- கொரோனா பற்றிய அறிவுறுத்தலை மீறி மக்கள் வெளியே நடமாடுவதால் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்படுகிறது.
- மாவட்ட எல்லைகள், மூடப்பட்டாலும், காய்கறி, பால், உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை கொண்டு செல்லட் தடையில்லை.
- அத்தியாவசிய ப்பணிகளை மேற்கொள்வோர் தங்களது பணிகளை தொடரலாம்.
- அம்மா உணவகங்கள் வழக்கம் போல் இயங்கும். மருந்தகங்கள், உணவகங்கள் செயல்பட அனுமதி.
- பேருந்துகள், டாக்சி, ஆட்டோக்கள், இயங்காது.
- மருந்து அத்தியாவசிய பொருள் தயாரிப்பு ஆலை இயங்கலாம்.
- ஏற்கனவே நிச்சயிக்கப்பட்ட நிகழ்ச்சிகளை தொடர காவல்துறை அனுமதி தேவை.
- அத்தியாவசியத்துறைகள் மற்றும் அலுவலகப்பணிகள் தவிர மற்ற அரசு அலுவலகங்கள் செயல்படாது.
- தமிழகத்தில் நாளை மாலை 6 மணி முதல் மார்ச் 31-ம் தேதி வரை அனைத்து மாவட்ட எல்லைகளை மூட உத்தரவிடப்படுகிறது.
- மாவட்ட எல்லைகள் மூடப்பட்டாலும், காய்கறி, பால், உள்ளிட்ட அத்தியாவசியபொருட்களை கொண்டு செல்ல தடையில்லை.
- சென்னை, காஞ்சிபுரம், ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களை முடக்க மத்திய அரசு அறிவுறுத்திய நிலையில் அனைத்து மாவட்டமும் முடக்கப்படுகிறது.
- குற்றவியல் நடைமுறைச்சட்டத்தின் பிரிவு 144ன் கீழ் உரிய உத்தரவுகளை பிறப்பிக்க வேண்டும்.
- அத்தியாவசிய கட்டிடம் பணிகள் தவிர பிற கட்டிடம் பணிகளுக்கு தடை விதிக்கப்படுகிறது.
- மருத்துவம் உள்ளிட்ட பணிகளையும் மேற்கொள்ளும் தனியார் நிறுவனங்கள், மருத்துவமனைகள் இயங்கும்.
- தனியார் நிறுவனங்கள், ஐ.டி.ஊழியர்கள் வீட்டில் இருந்தே பணிபுரிய வேண்டும்.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அண்டை மாநிலமான புதுச்சேரியில் இன்று இரவு 9 மணி முதல் 31ம் தேதி வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப் படுகிறது. அம்மாநில முதல் அமைச்சர் நாராயணசாமி இதனை அறிவித்துள்ளார்.
இந்த தடை உத்தரவு இருக்கும் காலத்தில், உணவகங்களில் பார்சலுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும். ஆன்லைன் உணவு டெலிவரிக்கு அனுமதி கிடையாது என அதிரடி முடிவை அறிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.