இயக்குநர் பாலா மீது தயாரிப்பாளர் விஏ துரை தொடர்ந்த வழக்கு தள்ளுபடி

பாலா இயக்கத்தில் விக்ரம், சூர்யா இணைந்து நடித்த ‘பிதாமகன்’ திரைப்படம் கடந்த 2003ல் வெளியானது. இந்தப் படத்தை எவர்கிரீன் நிறுவனம் சார்பில் வி ஏ துரை தயாரித்தார். இது கப்பெரிய வெற்றி படமாக அமைந்தது. விக்ரமுக்கு சிறந்த நடிகருக்கான தேசிய விருதையும் பெற்றுத் தந்தது.
அதே நேரம், வி.ஏ.துரை, ‘புது படத்துக்காக இயக்குநர் பாலாவுக்கு ரூ. 25 லட்ச ரூபாய் தந்தேன். ஆனால் இருவரும் இணைந்து படத்தை உருவாக்கவில்லை. அந்த பணத்தை பாலா திருப்பித்தர வேண்டும்’ என்று கூறி வந்தார். நீதிமன்றத்திலும் வழக்கு தொடுத்தார்.
இந்த நிலையில் வழக்கை தள்ளுபடி செய்து நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.
இதற்கிடையே கடந்த (2023ம்) வருடம், அக்டோபர் மாதம் வி.ஏ.துரை நோய்வாய்ப்பட்டு மரணமடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.