திருநெல்வேலி PSSல் இன்னும் மோசமாக காத்தாடியது போல” என்று பதிவிட்டு, அதற்கான திரையரங்க டிக்கெட் புக்கிங் படங்களையும் வெளியிட்டு உள்ளார்.
அதே நேரம், இந்த பதிவுக்கு பின்னூட்டம் இட்டுள்ள Sankar Jos Sharon என்பவர், ” திருநெல்வேலி  PSS Multiplex   லல்லாம் கலெக்சனை அள்ளிட்டாங்க! சன்டே மட்டும் 20 ஷோ ஹவுஸ்புல்! நேற்று இரவு காட்சி கூட மூனு ஸ்கீரின்ல நல்ல கூட்டம். எப்படியும் இன்னும் ரெண்டு வாரம் ஓடும்” என்று தெரிவித்து உள்ளார்.
இப்படி நெட்டிசன்கள் பலரும், இருவேறுவித கருத்துக்களை பதிவிட்டு வருவதைப் பார்க்க முடிகிறது.
இதற்கிடையே விஜயின் தந்தையும் திரைப்பட இயக்குநருமான எஸ்.ஏ.சந்திரசேகர் ஒரு யு டியுப் சேனலுக்கு அளித்த பேட்டியில், ” தயாரிப்பு நிறுவனம் கோடிக்கணக்கில் தற்போது படங்களின் வசூல் விவரங்களை வெளியிடுவதை எப்படி பார்க்கிறீர்கள் என கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதில் அளித்தவர் அதெல்லாம் ஐஸ் வைக்கிற வேலை.  அடுத்த படத்துக்கு கால்ஷூட் கிடைக்காது என்பதால் சொல்கிறார்கள். ஒரு கட்டத்தில் அவர்கள் ஹீரோக்களின் ரசிகராகி விடுவதே இதுபோல நடப்பதற்கு காரணம்” என்று தெரிவித்து உள்ளதும் கவனத்தை ஈர்த்துள்ளது.