கொடூர கரோனாவில் இருந்து தப்பிக்க வழி…! : சொல்கிறார் திவ்யா சத்தியராஜ்

உலக நாடுகளை அச்சுறுத்தும் கொடூர ஆட்கொல்லி நோய் கரோனா வைரஸ். இந்த ஆட்கொல்லி நோய் நாளுக்கு நாள் அதன் வீரியத்தை அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இந்த நோயிடமிருந்து நம்மை எப்படி பாதுகாத்துக் கொள்வது என்பதைனை நடிகர் சத்யராஜின் மகளும், ஊட்டச்சத்து நிபுணருமான திவ்யா சத்யராஜ் உலக நாடுகளை அச்சுறுத்தும் கரோனா வைரஸிலிருந்து பாதுகாத்துக் கொள்ள கையாள வேண்டிய வழிமுறைகளைக் கூறுகிறார்.

இது குறித்து அவர் நேற்றும் வெளியிட்ட செய்திக் குறிப்பு இதோ:

1) இறைச்சிகளுக்கும், சமைத்த உணவுகளுக்கும் வெவ்வேறு வெட்டும் பலகைகளையும், கத்திகளையும் பயன்படுத்துங்கள்.

2) சமைத்த உணவுகளையும், இறைச்சியையும் கையாளும்போது கைகளை நன்கு கழுவிக் கொள்ளுங்கள்.

3) நன்கு சமைக்கப் பட்ட உணவுகளையே உண்ணுங்கள்.

4) ஒருமுறை பயன்படுத்தும் முகக்கவசங்களை பயன்பாட்டுக்குப் பிறகு உடனடியாக அப்புறப்படுத்திவிடவும். அப்புறப்படுத்தியதும் கைகளை நன்கு கழுவி விட வேண்டும்.

5) இருமல் மற்றும் காய்ச்சல் இருப்பவர்களோடு நெருக்கமாக இருப்பதைத் தவிர்க்கவும்.

6) அழுக்கான ஆடைகள் மற்றும் காலணிகளை குடும்ப உறுப்பினர்களிடமிருந்து விலக்கி வைக்கவும்.

7) நோய்வாய்ப்பட்ட விலங்குகளிடமிருந்தும், கெட்டுப்போன மாமிசங்களிடமிருந்தும் விலகியிருக்கவும்.

8) குறிப்பாக விலங்குகளையும், விலங்குகளின் பொருட்களையும் தொட்ட பிறகு அடிக்கடி கைகளை சோப்பு போட்டுக் கழுவுங்கள்.

9) இருமலோ, காய்ச்சலோ இருந்தால் பயணத்தைத் தவிர்க்க வேண்டும்.அதன் மூலம் மற்றவர்களுக்கு பரவாமல் தடுக்கலாம்.

10) நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கக் கூடிய வைட்டமின் சி

உணவுகளை அதிகம் எடுத்துக் கொள்ளுங்கள்.

வைட்டமின் சி உணவுகள்;

கொய்யா, பார்சிலி,
மஞ்சள் குடைமிளகாய்,

சிவப்பு குடைமிளகாய்,

கிவி,

ப்ராக்கோலி,

லிச்சி,

பப்பாளி,ஸ்ட்ராபெர்ரி,

ஆரஞ்சு

,எலுமிச்சை,

 சாத்துக்குடி,அன்னாசி பழம், நெல்லிக்காய்,காலிஃப்ளவர்,மாம்பழம் ஆகிய பழங்களிலும், மற்றும் காய்கறிகளிலும் அதிகம் இருக்கிறது.