தமிழ் நாட்டில் தமிழ்தான்! தமிழக அரசு அதிரடி!
தமிழ்நாட்டில் இருக்கும் அனைத்து கடைகள்,வணிக நிறுவனங்கள் அனைத்திலும் பெயர் பலகை தமிழில் தான் இருக்க வேண்டும் என தமிழக அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. தமிழ் நாடில் உள்ள பெரிய, சிறிய, வணிக நிறுவனங்கள்,ஓட்டல்கள்,கடைகள் தமிழைத் தவிர புரியாத பெயரில் பெரும்பாலும் இருகின்றன. இதற்கு முற்றுப்புள்ளி வைத்திருக்கிறது அரசு.
“தமிழ்நாட்டில்’’ இருக்கும் அனைத்து கடைகள், வணிகநிறுவனம் மற்றும் உணவு விடுதிகளின் பெயர் பலகை தமிழில் தான் இருக்க வேண்டும் என அரசு ஆணைகள் எண் – 3312’’ 1983 மற்றும்1984-ம் ஆண்டுகளின் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு முறையே 1948-ம் ஆண்டு தமிழ்நாடு கடைகள் மற்றும் நிறுவனங்கள் விதிகளிலும், 1959-ம் ஆண்டு தமிழ்நாடு உணவு நிறுவனங்கள் விதிகளிலும் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு நடைமுறையில் உள்ளன.
மேற்கூறிய அரசாணைப்படி கடைகள், நிறுவனங்களின் பெயர் பலகையில் முதலில் தமிழ் எழுத்துக்கள் இருக்க வேண்டும். மற்ற மொழிகள் பெயர் பலகையில் ஆங்கிலம் இரண்டாவது இடத்தில், மற்ற மொழிகள் மூன்றாவது இடத்திலும் இருக்க வேண்டும்.
கடைகள், நிறுவனங்களில் பெயர் பலகை வைக்கும் போது மேற்கூறிய சட்ட விதிகள் பின்பற்றப்படவிட்டால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கபப்ட்டுள்ளது.