காங்ரஸ் எம்.பி.வசந்தகுமார் தொடர்ந்து கவலைக்கிடம்!!
சென்னை: கொரோனா தொற்று காரணமாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் காங்கிரஸ் எம்பி வசந்த குமாரின் உடல்நலம் மிகவும் மோசமாக இருப்பதாக மருத்துவமனை நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது. கன்னியா குமரி மாவட்ட காங்கிரஸ் எம்.பி வசந்தகுமாருக்கு வெண்டிலேட்டர் உதவியுடன் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
70 வயது ஆகும் வசந்தகுமார் மற்றும் அவரது மனைவி தமிழ்செல்விக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டது. இருவரும் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை கொடுக்கப்பட்டு வந்தன.
இந்த சூழ்நிலையில் எம்.பி வசந்த குமாரின் உடல்நலம் கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை தகவல் தெரிவித்துள்ளது. இந்த செய்தியை அவரது மகன் விஜய் வசந்த் உறுதிபடித்தியுள்ளார்.
இனியன்