‘அகரவா மகரவா..’ : சிவன் பக்தர்களுக்கு ஒரு ‘டிவைன்’ ட்ரீட்!

‘அகரவா மகரவா..’ : சிவன் பக்தர்களுக்கு ஒரு ‘டிவைன்’ ட்ரீட்!

சிவபெருமானின் திருவருளையும், ஆன்மிக அதிர்வுகளையும் ஒருங்கே இணைத்து Yaan Foundation வழங்கியிருக்கும் “அகரவா மகரவா” பாடல் இப்போது வெளியாகி இணையத்தைக் கலக்கி வருகிறது!

யாரெல்லாம் கலந்துகொண்டார்கள்? பிரசாத் திரையரங்கில் நடந்த பிரம்மாண்ட வெளியீட்டு விழாவில், திண்டுக்கல் சிவபுர ஆதீனம் ஸ்ரீலஸ்ரீ திருநாவுக்கரசு தேசிக பரமாச்சாரிய சுவாமிகள், திருமதி தேச மங்கையர்க்கரசி மற்றும் முன்னணித் திரைப்பட இயக்குநர்களான லக்ஷ்மன், வசந்தமணி உள்ளிட்ட பல முக்கியப் பிரமுகர்கள் கலந்துகொண்டு பாடலை வெளியிட்டனர்.

பாடலின் சிறப்பம்சங்கள்:

  • வரிகள்: “காற்றோடு பட்டம் போல”, “நீலோத்தி” போன்ற சூப்பர் ஹிட் சினிமா பாடல்களை எழுதிய சாரதி, சிவபெருமானின் பெருமையை எளிய தமிழில் ஆழமான அர்த்தங்களுடன் செதுக்கியுள்ளார்.

  • குரல்: பிரபல ஆன்மிகப் பாடகர் கோல்ட் தேவராஜ் தனது கணீர் குரலில் பக்தி உணர்வை உச்சத்துக்கே கொண்டு சென்றிருக்கிறார்.

  • இசை: கணேஷ் ராகவேந்திராவின் மெல்லிசை, பாடலுக்கு ஒரு தெய்வீகத் தன்மையைச் சேர்த்துள்ளது.

  • இயக்கம்: இயக்குநர் சமுத்திரக்கனி மற்றும் லக்ஷ்மனிடம் பயின்ற சாவியோ இந்தப் பாடலை மிக நேர்த்தியாக இயக்கியுள்ளார்.

தொழில்நுட்பக் கூட்டணி: கௌதமின் எடிட்டிங் மற்றும் AI மெருகூட்டலுடன், பிரதீப் குமார் – தீபா தயாரிப்பில் உருவாகியுள்ள இந்த ஆல்பம், சிவ பக்தர்களின் மனதை வென்று வருகிறது.

ஆன்மிகச் சாரலில் நனைய விரும்புபவர்கள், YaanTamil யூடியூப் சேனலில் இந்தப் பாடலைக் கண்டு மகிழலாம்!

பாடல் லிங்க்: https://youtu.be/fi0T5plA4II

Related Posts