திருப்பாவை, திருவெம்பாவை பாடல் 5

மாயனை மன்னு வடமதுரை மைந்தனை
தூய பெருநீர் யமுனைத் துறைவனை
ஆயர் குலத்தினில் தோன்றும் அணிவிளக்கை
தாயைக் குடல்விளக்கம் செய்த தாமோதரனை
தூயோமாய் வந்து நாம் தூமலர்த் தூவித்தொழுது
வாயினால் பாடி மனத்தினால் சிந்திக்க
போய பிழையும் புகுதருவான் நின்றனவும்
தீயினில் தூசாகும் செப்பேலோர் எம்பாவாய்

அதிசயமான செயல்களைச் செய்பவனும், இறைவன் மதுராபுரியில் பிறந்தவன். பெருக்கெடுத்து ஓடும் தூய்மையான  யமுனை நதிக்கரையில் விளையாடி மகிழ்ந்தவன். இடையர் குலத்தில் பிறந்த அழகிய விளக்காவன். தேவகி தாயாரின் வயிற்றில் பிறந்து பெருமை கொடுத்தவனும், இவனது சேட்டையில் பொறுமை இழந்த யசோதையோ இடுப்பில் கயிறைக் கட்ட அது அழுத்தியதால் தழும்பு உடையவனும்’ எங்கள் கண்ணனை, நாங்கள் தூய்மையாக குளித்து, மணம் இருக்கும் மலர்களுடன் அவனைப் பார்க்க தயாராவோம்.

அவனை மனதில் நினைத்து அவன் புகழ் பாடினாலே போதும் செய்த பாவ பலன்களும், செய்கின்ற பாவ பலன்களும் தீயினில் இட்ட தூசு போல காணாமல் சென்றுவிடும்.

விளக்கம்: உன்னைப் ஈன்றதனால் அவள் மற்றவராலே போற்றப்பட வேண்டும் என்பது ஒரு தாய்க்கு பிள்ளை செய்ய வேண்டிய கடமை ஆகும். தேவகி அண்ணைக்கு கண்ணனை பெற்றதால் பெருமை. குழந்தைகள், பெற்றவர்களுக்கு நல்ல பெயர் வாங்கித் தரவேண்டும் என்பது இதன் பொருள்.

திருவெம்பாவை பாடல் 5

மாலறியா நான்முகனும் காணா மலையினை நாம்
போலறிவோம் என்றுள்ள பொக்கங்களே பேசும்
பாலூறு தேன்வாய்ப் படிறீ கடைதிறவாய்
ஞாலமே விண்ணே பிறவே அறிவறியான்
கோலமும் நம்மை ஆட்கொண்டருளிக் கோதாட்டும்
சீலமும் பாடிச் சிவனே சிவனேயென்று
ஓலம் இடினும் உணராய் உணராய்காண்
ஏலக்குழலி பரிசேலோர் எம்பாவாய்
பொருள்; நறுமணத்திரவியம் பூசிய கூந்தலையும், பாலும் தேனும் ஊறும் சுவையான  உதடுகளைக் கொண்டவளுமான பெண்ணே! திருமால் வராகி, , பிரம்மா அன்னமாக உருவெடுத்துச் சென்றும் அவரது உச்சியையும், பாதங்களையும் காண முடியாத பெருமையை உடைய மலை வடிவானவர் நம் அண்ணாமலையார்.

ஆனால், அவரை நாம் அறிவோம் என நீ சாதாரணமாகப் கூறுகிறாய். நம்மால் மட்டுமல்ல… இந்தவுலகில், அவ்வுலகிலுள்ள தேவர்களாலுமே அவனை தெரிந்து கொள்ள இயலாது. அப்படிப்பட்ட பெருமைக்குரியவனை உணர்ச்சிப் பொங்க சிவ சிவ என்று அழைக்கிறோம். நீயோ, இதை  அறிந்து கொள்ளாமல் உறக்கத்தில் இருக்கிறாய். முதலில் கதவைத் திற என்று தோழியை எழுப்புகிறார்கள்.