திருப்பாவை, திருவெம்பாவை பாடல் 10

திருப்பாவை 10

நோற்றுச் சுவர்க்கம் புகுகின்ற அம்மனாய்!

மாற்றமும் தராரோ? வாசல் திறவாதார்
நாற்றத் துழாய்முடி நாராயணன் நம்மால்
போற்றப் பறைதரும் புண்ணியனால் பண்டொருநாள்
கூற்றத்தின் வாய்வீழ்ந்த கும்பகர்ணனும்
தோற்றும் உனக்கே பெருந்துயில் தந்தானோ?
ஆற்ற அனந்தல் உடையாய்! அருங்கலமே!
தேற்றமாய் வந்து திறவேலோர் எம்பாவாய்.

பொருள்: போனபிறவியில் எம்பெருமான் நாராயணனை நினைத்து நோன்பிருந்ததன் பயனாக, இப்போது உனது வாழ்க்கை சொர்க்கம் போல் சுகத்தை அனுபவிக் கின்ற பெண்ணே! உனது வீட்டின் கதவை திறக்காவிட்டாலும் பரவாயில்லை. பேசவும் மாட்டாயோ?  நறுமணம் வீசும் துளசியை தலையில் சூடிய  நாராயணனை நாம் போற்றி பாடினால் அவன் நமக்கு விரதத்தின்  பலனை உடனே கொடுப்பான்.

தூக்கதிற்கு உதாரணமாக , கும்பகர்ணனை சொல்வார்கள். தூக்கத்திற்கு உதாரணமாகச் சொல்வார்கள். உனது தூக்கத்தைப் பார்த்தால், நீ அவனையும் மிஞ்சிவிடுவாய் போல் இருக்கிறது. சோம்பல் உருவமே! கிடைத்தற்கரிய அணிகலனே! எந்த கலக்கமும் இல்லாமல் கதவைத் திறந்து வெளியே வா.

. இந்த பாடல்  ஆண்டாள் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே சொன்ன நகைச்சுவை  என்பதை இந்தப் பாடல் தெளிவுபடுத்துகிறது. நகைச்சுவை உணர்வு நம் ஆயுளை அதிகரிக்கும். வாய்விட்டு சிரித்தால் நோய்விட்டுப் போகும் என்பார்கள் இந்த பாடல் அதுவே உணர்த்துகிறது.

திருவெம்பாவை பாடல் 10

பாதாளம் ஏழினும் கீழ் சொற்கழிவு பாதமலர்
போதார் புனைமுடியும் எல்லாப் பொருள்முடிவே
பேதை ஒருபால் திருமேனி ஒன்றல்லன்
வேதமுதல் விண்ணோரும் மண்ணும் துதித்தாலும்
ஓதஉலவா ஒரு தோழன் தொண்டர் உளன்
கோதில் குலத்தான் தன் கோயிற்பிணாப் பிள்ளைகாள்
ஏதவனூர் ஏதவன்பேர் ஆருற்றார் ஆரயலார்
ஏதவனைப் பாடும் பரிசேலோர் எம்பாவாய்.

பொருள்: தீயஎண்ணங்கள் இல்லாத குலத்தில் தோன்றியவர்களும், கோயில் திருப்பணியையே தனதாக்கிக் கொண்டவர்களுமான பெண்களே! நம் தலைவனாகிய சிவபெருமானின் சொல்வதற்கரிய பெருமையுடைய திருப் பாதங்கள் ஏழுபாதாள லோகங்களையும் கடந்து கீழே இருக்கின்றன.

பலவிதமான மலர்களை சூடும் திருமுடியானது வான த்தின் எல்லைகளைக் கடந்து எல்லாப் பொருட்களுக்கும் எல்லையாக இருக்கிறது. சக்தியை உடலில் ஒரு பாகமாகக் கொண்டதால் அவன் ஒருவனல்ல என்பது தெரிகிறது. வேதங்களும், விண்ணவரும், பூலோகத்தினரும் ஒன்று சேர்ந்து துதித்தாலும் அவன் புகழைப் பாடி முடிக்க இயலாது.

யோகிகளுக்கும் ஞானிகளுக்கும் அவன் நண்பன். ஏராளமான பக்தர்களைப் பெற்றவன். அவனுக்கு எந்த ஊரும் கிடையாது? அவனது பெயர் என்ன? யார் அவனது உறவினர்கள்? யார் அவனது பக்கத்து வீட்டுக்காரர்கள்? எந்தப் பொருளால் அவனைப் பாடி முடிக்க முடியும்? சொல்லத் தெரியவில்லையே!

இந்த பாடலில் உனக்கு பயன்படாத ஒன்றை எனக்கு அணிவி என்று தன் எளிமையை வெளிப்படுத்துகிறான் இறைவன்.