“ராமர் ஒரு காவியத் தலைவன்”: மிஷ்கின் ‘டெவில்’ பேச்சு!

“ராமர் ஒரு காவியத் தலைவன்”: மிஷ்கின் ‘டெவில்’ பேச்சு!

மிஷ்கினின் சகோதரர் ஆதித்யா இயக்கியுள்ள படம் ‘டெவில்’. இப்படத்துக்கு மிஷ்கின் இசையமைத்து உள்ளார். இந்நிலையில், படம் குறித்த செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது.

நிகழ்ச்சிப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய மிஷ்கின், “25 ஆண்டுகளாக திரைத்துரையில் இருக்கிறேன்.  விஜய்சேதுபதி போன்ற ஒரு சிறந்த நடிகரை நான் பார்க்கவில்லை” என்றார்.

அப்போது அவரிடம் ‘அயோத்தி ராமர் கோயில் திறப்பு’ குறித்து கேட்கப்பட்டது. அதற்கு அவர்,  “ராமர், அல்லா, ஏசு அனைவருமே என் மனதில் இருக்கின்றனர்.  ராமர் மிகப் பெரிய அவதாரம். ஒரு காவியத் தலைவன். இன்னும் என்னென்னமோ சொல்வார்கள். அரசியல் ரீதியாக எனக்கு கருத்து சொல்லத் தெரியாது.

ஆனால் சினிமாக்காரனாக அரசியல் சார்ந்து எதையும் சொல்லக் கூடாது என முடிவெடுத்திருக்கிறேன். என் அரசியல் நான் எடுக்கும் சினிமாதான். என் கதாபாத்திரங்கள் எல்லா காலக்கட்டத்திலும் இருக்கும், மனித அவலம், மனிதர்கள் நேசிக்கதவறியது, சக உயிர்கள் மீது அன்பு செலுத்தாமை குறித்து பேச நினைக்கிறேன். தற்போதைய அரசியல் குறித்து பேச வேண்டாம் என நினைக்கிறேன். நான் அரசியல் பேசும் இடம் என்னுடைய வாக்குப்பதிவு மையம் மட்டும் தான். அரசியல் பேசாததால் நான் பயப்படுகிறேன் என அர்த்தமில்லை. சினிமாக்காரனாக என்னுடைய கதைகள் மூலம் என் அரசியல் வெளிப்பட வேண்டும் என நினைக்கிறேன்” என்றார்.