சென்னை பத்திரிகையாளர் மன்றத்தை மீட்டெடுக்க பத்திரிகையாளர்கள் முற்றுகை!

சென்னை பத்திரிகையாளர் மன்றத்தை மீட்டெடுக்க பத்திரிகையாளர்கள் முற்றுகை!

சென்னை பத்திரிகையாளர் மன்றத்தை மீட்டெடுக்க பத்திரிகையாளர்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

முன்னதாக இது குறித்து அறிவிப்பு வெளியிட்ட  சென்னை பிரஸ் கிளப்பின் கவுர ஆலோசகர், எஸ்.புஹாரி ஷரீஃப் விடுத்த அறிக்கையில் தெரிவித்து இருந்ததாவது..

“உரிமை மீட்போம்… வரலாற்றில் பதியப்படுவோம்..!

நண்பர்களுக்கு வணக்கம்….!

பாரம்பரியம்மிக்க CHENNAI PRESS CLUB -ன் பெயரை பயன்படுத்தி பல கோடி அளவுக்கு மோசடிகளில் ஈடுபட்ட கும்பல், தொடர்ந்து சட்டவிரோதமாக செயல்பட்டு வருகிறது.

ஆனால் நாம் சட்டப்படி நீதிமன்ற ஆணை பெற்று, தமிழக அரசின் பதிவுத்துறையில் முறையாக CHENNAI PRESS CLUB – பை பதிவு செய்தும், பத்திரிகையாளர்கள் நலனுக்காக CHENNAI PRESS CLUB – உண்மையான மூத்த / இளம் பத்திரிகையாளர்களை நிர்வாகிகள் / உறுப்பினர்களாக கொண்டு புத்தெழுச்சியுடன் செயல்பட்டு வருகிறோம்.

இது தமிழக பத்திரிகையாளர்கள் அனைவருக்கும், தமிழக அரசுக்கும் தெரியும்.

பத்திரிகையாளர்ளின் நலனையும், உரிமைகளையும் காத்திட நாம் போராடி பெற்ற CHENNAI PRESS CLUB -ன் செயல்பாடுகளை முடக்க முனைந்து, சென்னை பத்திரிகையாளர் மன்றத்தை சேர்ந்த நிர்வாகிகள், அந்த 420 -யின் தூண்டுதலின் பேரில் நமது CHENNAI PRESS CLUB ன் பெயரையும், லோகோ- வையும் சட்டவிரோதமாக பயன்படுத்தி வருகின்றனர். இதன்மூலம் நீதிமன்ற தீர்ப்பையும், அரசின் உத்தரவையும் அவமதிப்பதோடு, CHENNAI PRESS CLUB ன் பெயரையும், அதன் நிர்வாகிகள், உறுப்பினர்களான நமது பெயரையும் களங்கப்படுத்தி, அவதூறுபரப்பி வருகின்றனர்.

அனைத்து பத்திரிகையாளர்களுக்கும் சொந்தமான கட்டிடத்தை ஆக்கிரமி த்தும், நமது CHENNAI PRESS CLUB ன் பெயரையும், Logo வையும் சட்டவிரோதமாக  பயன்படுத்தி வருவதை கண்டித்து, நாளை 25-05-2024 (சனிக்கிழமை) காலை 11.00 மணியளவில் சென்னை சேப்பாக்கத்திலுள்ள சென்னை பத்திரிகையாளர் மன்ற கட்டடத்தில் அமைந்துள்ள நமது  CHENNAI PRESS CLUB பெயரையும், அதன் LOGO வையும் சாத்வீகமான முறையில் கருப்பு மை பூசி அழிக்கும் ஆர்ப்பாட்டத்திற்கு நமது சங்க நிர்வாகிகள், உறுப்பினர்கள் மற்றும் நேர்மை விரும்பும் அனைத்து பத்திரிகை அமைப்புக்களை சேர்ந்த நிர்வாகிகள், உறுப்பினர்கள் அனைவரும் சங்க பாகுபாடு ஏதுமின்றி தவறாமல் கலந்துக் கொள்ள வேண்டுமென அன்புடன் அழைக்கிறோம்.

பத்திரிகையாளர்கள் வரலாற்றில் “ஊழல் – மோசடி பேர்வழிகளை விரட்டி அடித்து, உரிமையை நிலைநாட்டிய போராளிகளாய் பதியப்பட வாருங்கள்…!”

நன்றி

அன்புடன்,

– புஹாரி ஷரீஃப்

கவுரவ ஆலோசகர்,

CHENNAI PRESS CLUB” – இவ்வாறு கூறப்பட்டு இருந்தது.அதே போல, பத்திரிகை ஊடகவியலாளர்கள் கூட்டுஇயக்கப் பேரவை மற்றும் தமிழ்நாடு மூத்த பத்திரிகையாளர்கள் பேரவை வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டு இருந்ததாவது..

“சென்னை பத்திரிகையாளர் மன்றத்தை மீட்டெடுக்க துணை நிற்போம் !

பத்திரிகையாளர்களின் வேடந்தாங் கலாக இருக்க வேண்டிய சென்னை பத்திரிகையாளர் மன்றம், கயமைத் தனவர்களின் கூடாரமாக, ஜனநாயக முறைப்படி இயங்காத, தேர்தல் எது வும் நடத்தப்படாத ஒரு அமைப்பாக இருந்து வருவது வேதனைக்குரியது.

ஜனநாயக நடைமுறையற்ற அந்த பத்திரிகையாளர் மன்றத்தை, மீட் டெடுத்து சீரமைத்து, முறைப்படியான தேர்தல் நடத்தி, பத்திரிகையாளர் களின் புகலிடமாக பாதுகாக்க வேண் டும் என்கிற முயற்சிகள் இன்றைக்கு நேற்றல்ல, கடந்த பத்தாண்டுகளுக் கும் மேலாகவே மேற்கொள்ளப்பட்டு வந்துள்ளன.

1999க்கு பிறகு கடந்த 25 ஆண்டுக ளாக தேர்தலே நடத்தப்படாமல் ஜன நாயக முறைப்படி நிர்வாகிகள் தேர்ந் தெடுக்கப்படாமல்,சில வெளிஆட் களால், சென்னை பத்திரிக்கையாளர் மன்றம் தன்னிச்சையாக செயல்பட்டு வந்திருக்கிறது. ஊருக்கே உபதேசம் செய்யும் பத்திரிக் கையாளர்களுக்கு இது ஒரு அவமானகரமான காரிய மாகவே கருதப்படுகிறது.

பத்திரிக்கையாளர் மன்றத்துக்கு இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை ஜனநாயக முறைப்படியான தேர்தல் நடத்தி, நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப் பட்டு, மன்ற செயல்பாடுகளை வழி நடத்திடவேண்டும் .பல ஆண்டுகளாக தற்காலிகமாக சுயேட்சையாக பொறுப்பு ஏற்றுக் கொண்டவர்களின் பிடியிலிருந்து நிர்வாகப்பொறுப்புகளை மீட்டெடுக் கப்பட வேண்டும்.

பத்திரிகையாளர் மன்றத்தில் நடத் தப்படும் பத்திரி கையாளர்கள் சந்திப் புகளுக்காக பெரிய அளவில் வசூலிக் கப்படும் வருமானமானத்துக்கு இது வரை எந்தவொரு கணக்கு  வழக்கு களும் முன்வைக்கப்படாமல் இருப் பதை மாற்றி அமைத்திட வேண்டும்.

ஒரு சிலருக்கே அப்பெரும் வருமானம் பங்கு அளிக்கப்பட்டு வருவதையும் தடுத்து நிறுத்திடவேண்டும் உள்ளிட்ட இத்தகைய கோரிக்கைகள் ஏதும் இதுவரை செவி சாய்க்கப்படாமல், நீதிமன்ற தடை வழக்குகளாலும், நீதிமன்ற அவமதிப்பு வழக்குகளாலும் தட்டிக் கழிக்கப்பட்டே வந்திருக்கின் றன..

பாரதி தமிழன் (எ) பெருமாள் தன்னிச் சையாக இணைச்செயலாளராக தன்னை அறிவித்துக்கொண்டு, உடன் சிலஅடியாட்களை வைத்துக்கொண்டு லட்சக்கணக்கான வருமானத்தை பங்குபோட்டு கொண்டு, கண்துடைப்பு வேலைகளை செய்து வருவது கண்டி க்கத்தக்கது என்றே பத்திரிகையாளர் அனைவரும் குமறுகிறார்கள்.

மேற்படியான குற்றச்சாட்டுகள் நீதி மன்றத்தில் தெரிவிக்கப்பட்டு, ஜன நாயக முறைப்படியான தேர்தல் நடத்தப்பட்டு, வழிவகைகள் செய்திட வேண்டும் என்கின்ற கோரிக்கைகள் வைக்கப்பட்டும் ஏதொன்றும் சாத்திய ப்படுத்தப்படவில்லை.

மூத்த பத்திரிக்கையாளர்கள் இந்து ராம், நக்கீரன் கோபால், அறம் சாவித் திரி கண்ணன் உள்ளிட்டவர்கள் தலையிட்டு முறைப்படுத்த முயன்றும், நந்திகளாக இருந்து வரும் பாரதி தமிழன் (எ)பெருமாள் மற்றும் அவரது கைப்பிள்ளைகள் பணம் கொட்டும் மன்ற நிர்வாகத்தை விட்டுவிடத் தயா ராக இல்லை.

பணத்தை எண்ணி பைக்குள் வைப்ப திலேயே  கவனமாக இருந்தவர்கள் , பத்திரிக்கையாளர் மன்ற வருடாந்திர கணக்கு வழக்குகளை சமர்ப்பிக்கா மலும் , பதிவுத்துறை மன்ற பதிவினை புதுப்பிக்காமலும், அலட்சியமாகவே இருந்து வந்துள்ளனர்.

ஹசின் முகமது, மூத்த பத்திரிகை யாளர் சி.ஜி.சேகர், தினகரன் மோகன் உள்ளிட்ட பல மன்றஉறுப்பினர்கள் மேற்படியான மீட்டெடுப்பு நடவடிக்கை களுக்கு  முன்னின்று பல முயற்சிகள் மேற்கொண்டும் பலன் அளிக்கவி ல்லை.

இவற்றையெல்லாம் தாண்டி டைம்ஸ் ஆப் இந்தியா நாளிதழின் செய்தி யாளர் செல்வராஜ் மற்றும் விமலேஸ் வரன் உள்ளிட்டோரின் தலைமைப் பொறுப்பிலுள்ள “சென்னை பிரஸ் கிளப் “அமைப்பு முறைப்படியான பதிவுத்துறை மன்ற பதிவினை பெற்று, நூற்றுக்கணக் கான மூத்த இளம் பத்திரிகையாளர் களை உறுப்பினர்களாக்கி, ஜனநாயக முறைப்படியான செயல்பாடுகளால் அனைத்து பத்திரிகையாளர்களையும் பத்திரிகையாளர்  சங்கங்களையும் அரவணைத்துக் கொண்டு கடந்த நான்கைந்து ஆண்டுகளாக சிறப்பாக செயல்பட்டுக்கொண்டு வருகிறது.

சென்னை பத்திரிகையாளர் மன்ற அதிருப்தி செயல்பாடுகளை எல்லாம் தோலுரித்து வெளிப்படுத்தி, பல சட்ட ரீதியான முயற்சிகளைமேற்கொண்டு பத்திரிகையாளர் மன்றத்தை மீட்டெ டுத்தே ஆகவேண்டும் என்ற முனைப் புடன் செயல்பட்டு வருகிறது.

பத்திரிக்கையாளர்கள் பலரின் ஆதரவு சக்திகளைஒன்று திரட்டி, பாரதி தமிழன் (எ )பெருமாள் மற்றும் அவரது அடியாட்களை சென்னை  பத்திரிகையாளர் மன்ற நிர் வாகக் குழுவிலிருந்து வெளியேற்றிட வேண்டும் என்றும், மேலும் மன்றத் தின் சொத்துக்களான வருமானத்தை யெல்லாம்  மீட்டெடுத் திடவேண்டும் என்றும் கங்கணம் கட்டி வந்துள்ளது.

மேற்படியான செயல்பாடுகளுக்காக அனைத்து ஆதரவு சக்திகளோடும் “சென்னை பிரஸ் கிளப்” அமைப்பு களம் இறங்கி இருப்பதை பத்திரிகை யாளர்கள் அனைவரும் வரவேற்று, உடனிருந்து ஆதரவு தெரிவித்து, மீட்டெடுப்புக்கு துணை நிற்பதும், இவற்றையெல்லாம் அரசின் கவனத் திற்கு கொண்டு செல்வதும் அத்தியா வசியமான கடமையாகும்” – இவ்வாறு கூறப்பட்டு இருந்தது.

இதன்படி நேற்று ( மே 25) பத்திரிகையாளர்கள் கூடி, பிரஸ் கிளப் கட்டிடத்தை முற்றுகையிட்டனர். அதே போல மன்ற நிர்வாகி விமலேஸ்வரன், மன்ற அறிவிப்பு பலகையில் தார் பூசி எழுத்துக்களை அழித்தார். இந்த போராட்டத்தில் ஏராளமான பத்திரிகையாளர்கள் கலந்துகொண்டனர்.இது குறித்து விமலேஸ்வரன் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்து இருப்பதாவது:

“நன்றி நன்றி நன்றி !!!

சென்னை பிரஸ் கிளப் சார்பில் நடைபெற்ற உரிமை மீட்பு போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்த நண்பர்கள் தோழர்கள் சங்க நிர்வாகிகள் மற்ற தோழமை சங்கத்தை சேர்ந்த நிர்வாகிகள் தொடர் போராட்டத்தில் கலந்துக் கொண்டவர்கள் அல்லது மறைமுகமாக ஆதரவு தெரிவித்தவர்கள் தூரமாய் இருந்து ஆதரவு தந்தவர்கள் அனைவருக்கும் சென்னை பிரஸ் கிளப் சார்பில் நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்” என்று விமலேஸ்வரன் குறிப்பிட்டு உள்ளார்.

Related Posts