“சபரிமலைக்கு வந்தா…!”: கேரள அமைச்சர் மிரட்டல்!

“சபரிமலைக்கு வந்தா…!”: கேரள அமைச்சர் மிரட்டல்!

“தமிழ்நாட்டில் பிற மாநில பதிவு எண் கொண்ட ஆம்னி பஸ்கள் இயங்க அனுமதி இல்லை” என்று அறிவித்தது போக்குவரத்துத்துறை. ;  மீறி இயங்கும் வெளிமாநில பதிவெண் கொண்ட ஆம்னி பேருந்துகள் மீது நடவடிக்கையும் எடுக்கப்பட்டது.

இந்த நிலையில், வெளிமாநில பதிவெண் கொண்ட ஆம்னி பஸ்கள் தமிழ்நாட்டில்  இயங்குவதற்கு தடை விதிக்கக்கூடாது என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதற்கிடையே, தமிழ்நாட்டுக்கு வரும் பிற மாநில பதிவு பஸ்களுக்கு நவம்பர் மாதம் 1-ம் தேதி முதல் சீட்டுக்கு 4000 ரூபாய் வீதம் காலாண்டுக்கு வரி செலுத்த வேண்டும் என முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியானது. இது கேரளா அரசு பேருந்துகளுக்கும் விரிவு படுத்தப்பட்டதாக, கேரள மாநில போக்குவரத்துத்துறை குற்றம்சாட்டி இருக்கிறது.

இதுகுறித்து கேரளா  சட்டசபையில் பேசிய, அம்மாநில கேரளா மாநில போக்குவரத்துத்துறை அமைச்சர் கே.பி.கணேஷ்குமார், “நம்மிடம் ஆலோசிக்காமல் தமிழ்நாடு அரசு அதிகரித்துள்ளது. தமிழ்நாடு அதிகாரிகளிடம் பேசியும் அவர்கள் அதை ஏற்கவில்லை. ‘அப்படியானால் இருக்கட்டும், நமக்கும் 4000 ரூபாய் அதிகரிக்கலாம்’ என்றேன்.

தமிழ்நாட்டில் உள்ளவர்கள் யோசிக்க வேண்டும், சபரிமலை சீசன் வர உள்ளது. அங்கிருந்து தான் அதிகமான பக்தர்கள் வருகிறார்கள். நாங்கள் எங்கள் கஜானாவில் பணத்தை நிறைப்போம்.

இங்கிருந்து செல்பவர்களை அங்கு தொந்தரவு செய்தால், அங்கிருந்து வருபவர்களை நாங்கள் இங்கு தொந்தரவு செய்வோம். அதில் எந்த சந்தேகமும் வேண்டாம். கே.எஸ்.ஆர்.டி.சி பஸ்களை அவர்கள் பறிமுதல் செய்தால், தமிழ்நாட்டு பஸ்களை நாங்கள் இங்கு பறிமுதல் செய்வோம்” என்று அதிரடியாக தெரிவித்தார்.

Related Posts