ஜீ. வி. பிரகாஷ் குமாரின் ‘ரெபல்’ மார்ச் 22ஆம் தேதி ரிலீஸ்! அதிகரிக்கும் எதிர்பார்ப்பு!

ஜீ. வி. பிரகாஷ் குமாரின் ‘ரெபல்’ மார்ச் 22ஆம் தேதி ரிலீஸ்! அதிகரிக்கும் எதிர்பார்ப்பு!

இசையமைப்பாளரும், நட்சத்திர நடிகருமான ஜீ. வி. பிரகாஷ் குமார் கதையின் நாயகனாக முதன்மையான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ‘ரெபல்’ திரைப்படம் மார்ச் 22ம் தேதி உலகம் முழுதும் திரையரங்குகளில் வெளியாகிறது.

அறிமுக இயக்குநர் நிகேஷ் ஆர். எஸ். உருவாக்கத்தில் தயாராகும் திரைப்படம் ‘ரெபல்’. இதில் ஜீ. வி. பிரகாஷ் குமார் கதை நாயகனாக நடித்து உள்ளார்.

மேலும், மமிதா பைஜூ, கருணாஸ், சுப்ரமணிய சிவா, ஷாலு ரஹீம், வெங்கிடேஷ் வி.பி., ஆதித்யா பாஸ்கர், ‘கல்லூரி’ வினோத், ஆதிரா உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் தோன்றுகிறார்கள்.

அருண் ராதாகிருஷ்ணன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ‘இசை அசுரன்’ ஜீ.வி. பிரகாஷ் குமார் இசையமைத்திருக்கிறார். கலை இயக்கத்தை உதயா கவனிக்க, பட தொகுப்பு பணிகளை வெற்றி கிருஷ்ணன் கையாண்டிருக்கிறார்.

உண்மை சம்பவங்களை தழுவி அதிரடி ஆக்சன் என்டர்டெய்னராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் சார்பில் பிரபல தயாரிப்பாளர் கே. ஈ. ஞானவேல் ராஜா பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாரித்திருக்கிறார்.

இப்படத்தின் இறுதி கட்டப் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. அண்மையில் இப்படத்தின் டீசர் வெளியாகி, மில்லியன் கணக்கிலான பார்வையாளர்களால் பார்வையிடப்பட்டு சாதனை படைத்தது.

மார்ச் 22ம் தேதி படம் வெளியாக இருக்கும் நிலையில் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்தபடி இருக்கிறது.

 

Related Posts