ஜோசியத்தை நம்பாதீங்க!: பாக்யராஜ்

திரைப்பட விழா ஒன்றில் பேசிய பாக்யராஜ், ஜோதிட நம்பிக்கையை வெளுத்து வாங்கிவிட்டார்.

அவர் பேசும்போது, “ஜோசியர் ஒருவரிடம் பேசிக்கொண்டிருந்தபோது ஒரு தகவலை கூறினார். அதாவது, 45 வயதுக்கு மேலுள்ளவர் வந்து, “மகன்..” என்று ஆரம்பத்தாலே, வேலை விஷயமாகத்தான் கேட்கிறார்கள் என அது குறித்து கூறுவேன். “மகள்..” என்று ஆரம்பித்தால், திருமணம் குறித்து கூறுவேன். இப்படி ஆட்களையும் அவர்கள் வயதையும் வைத்து பலன் கூறிவிடுவேன்” என்றார்.

இதுதான் ஜோசியம். ஆகவே உங்கள் உழைப்பை, திறமையை, அறிவை நம்புங்கள்” என்றார்.