அஞ்சலையம்மாள் திருவுருவச் சிலைக்கு த.வெ.க. ஆனந்த் மாலை அணிவித்து மரியாதை!

அஞ்சலையம்மாள் திருவுருவச் சிலைக்கு த.வெ.க. ஆனந்த் மாலை அணிவித்து மரியாதை!

இந்திய விடுதலைப் போராட்ட வீராங்கனை கடலூர் அஞ்சலையம்மாள் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு,  தமிழக வெற்றிக் கழகம் சார்பில் கழக பொதுச்செயலாளர் திரு.என்.ஆனந்த் அவர்கள் மாலை அணிவித்து மரியாதை செய்தார்.

இது குறித்து தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளதாவது:

“தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் தளபதி அவர்களின் அறிவுறுத்தலின்படி, கடலூர் முதுநகர் காந்தி பூங்காவில் அமைந்துள்ள அவரது திருவுருவ சிலைக்கு தமிழக வெற்றிக் கழகம் சார்பில் கழக பொதுச்செயலாளர் திரு.என்.ஆனந்த் அவர்கள் மாலை அணிவித்து மரியாதை செய்தார்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட மகளிர் அணி நிர்வாகிகள் யாஸ்மின், வெண்ணிலா, அம்சவள்ளி , விருத்தம்பாள் , சுசித்ரா, சசிகலா, காவியா ஆகியோர் உடனிருந்தனர்.

மேலும் இந்நிகழ்ச்சியில் கடலூர் மாவட்ட நிர்வாகிகள் S.சீனு, A.ராஜசேகர், B.ராஜ்குமார், AR.அன்பு, S.விஜய், S.அருண்ராஜ், K.ஆனந்த், கண்ணதாசன், S.பாலு, , மதன், C.பன்னீர், மாநகர நிர்வாகி S.சாரதி, கடலூர் ஒன்றிய நிர்வாகி J.சுபாஷ், மாநகர நிர்வாகிகள் பாலாஜி தேசிகன், உட்பட சுமார் 1000-க்கும் மேற்பட்ட மகளிர் மற்றும் கட்சி தோழர்கள் கலந்து கொண்டனர்” – இவ்வாறு அறிக்கையில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

Related Posts