ஆதியோகி முன் பிரமாண்ட அகல்..!

உலக நன்மைக்காக  நம் நாட்டின் பிரதமர் வேண்டுகோளுக்கு இனங்க கொரோனா நோய்த் தொற்றுக்கு எதிரான மக்களின் சமூக ஒற்றுமையை வெளிப்படுத்தும் விதமாக கோவை ஈஷா யோகா மையத்தில் நேற்று இரவு 9 மணிக்கு அகல் விளக்கு ஏற்றிய ஈஷா யோகா மைய நிறுவனர் சத்குரு.

இதையொட்டி, ஈஷாவில் உள்ள ஆசிரமவாசிகள் அனைவரும் தனித் தனியாக அகல் விளக்கு ஏற்றி தங்களின் தேசப்பற்றையும், ஒற்றுமையுணர்வையும் வெளிப்படுத்தினர்.

மேலும், உலக புகழ்பெற்ற ஆதியோகி முன்பும் பிரமாண்ட விளக்கு ஏற்றப்பட்டது.