முதல் முறையாக புத்தாண்டு பரிசுகள் கொடுத்த சின்னத்திரை நடிகர் சங்கம்!

முதன் முறையாக சின்னத்திரை நடிகர் சங்கத்தின் சார்பில் உறுப்பினர்களுக்கு புத்தாண்டுப் பரிசுகள் , புத்தாடை, இனிப்புகள் வழங்கும் விழா நேற்று  சின்னத்திரை நடிகர் சங்க அலுவலகத்தில் நடைபெற்றது. இதில்  சின்னத்திரை நடிகர் சங்கத்தின் துணைத்தலைவர் இயக்குநருமான மனோபாலா பரிசுகளை வழங்கினார்.

சின்னத்திரை நடிகர்கள் சங்கத்தின் தலைவர் ஏ. ரவிவர்மா “சின்னத்திரை நடிகர் சங்கத்தின் 16 ஆண்டுகால வரலாற்றில் உறுப்பினர்களுக்கு பரிசுகள் வழங்குவது இதுவே முதல் முறை என்றார்.

சங்கத்தின் உறுப்பினர்கள் எம்.பி .பாலாஜி மற்றும் சி. ஈஸ்வரன் இருவருக்கும்  சங்கத்தின் சார்பாக நன்றி.

 நமக்கு நாமே உதவி செய்து ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் என்கிற உயரிய நோக்கத்தில் சங்க உறுப்பினர்களே மற்ற உறுப்பினர்களுக்கு பரிசுப் பொருட்கள் வாங்கிக் கொடுத்து உதவுவதற்கு தொடக்கப் புள்ளியை  அமைத்திருக்கிறார்கள். இது மேலும் பலருக்கு  உற்சாகத்தையும் தூண்டுதலையும் கொடுக்கும் .

இந்த ஆண்டு நடிகர்கள் 150 பேர், நடிகைகள் 150 பேர். என்று 300 பேருக்கு பரிசுகள் வழங்கப்பட்டுள்ளன.

இப்போது 1800 பேருக்கு மேல் உறுப்பினர்கள் இருக்கிறார்கள். இந்தச் சங்கத்தில் அடுத்த ஆண்டு அனைத்து உறுப்பினர்களுக்கும் புத்தாண்டு பரிசு வழங்குவது என் தலைமையிலான சங்கம் முடிவு செய்துள்ளது. அதற்கு ஒரு ஆரம்பமாக இந்த விழா இருக்கிறது என்றார் .

 இவ் விழாவில் சின்னத்திரை நடிகர் சங்கத்தின் நிர்வாகிகள் மற்றும் சின்னத்திரை நடிகர், நடிகைகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.